பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தி உழைக்கும் பெண்கள் அமைப்பு மற்றும் சிஐடியு சார்பில் மீஞ்சூர் காமராஜர் துறைமுகம் நுழைவு வாயில் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.காஞ்சனா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கே.விஜயன், நிர்வாகிகள் ஜி.விநாயகமூர்த்தி, எஸ்.நரேஷ்குமார், வெங்கடேசன், ஜி.சுசிலியா உட்பட பலர் பங்கேற்றனர்.