ஊரடங்கை பயன்படுத்தி ஜனநாயகத்திற்கு புறம்பாக மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து வெள்ளியன்று (ஆக.21) துறைமுகம் பகுதி, 56வட்டம் பிஆர்என் கார்டன் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் செங்கேணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பகுதிச் செயலாளர் எம். ஜலால், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆர்.அருள்குமார் , டி.எஸ். ஜமால், எஸ். மஞ்சுளா, ஆர்.குமார், வட்டச் செயலாளர் வடிவேலன் உள்ளிட்டோர் பேசினர்.