மின் துறையை பொதுத்துறையாக பாதுகாத்திடகோரியும் ஜனவரி 8 வேலை நிறுத்தத்தை விளக்கியும் வடசென்னை அனல் மின் நிலையம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மண்டல செயலாளர் ரவிக்குமார், தொமுச செயலாளர் தேசிங் ,ஐஎன்டியூசி தலைவர்கள் தாமோதரன், இரவிசெல்வம் கணக்காயர் கள தொழிலாளர்கள் சங்கத்தின் ஆறுமுகம், சிஐடியு நிர்வாகிகள் ஜெயவேலு, வெங்கட்டய்யா, சுந்தரம், வெங்கடேசன் உள்பட பலர் பேசினர்.