tamilnadu

img

இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

குடிமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டு கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெற்றிவீரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் செல்லையா, விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் விஜயகுமார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஆதிமூலம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.