அமெரிக்க காவல் துறையின் நிறவெறி தாக்குதலை கண்டித்து புதுச்சேரி அண்ணாசிலை அருகே அகில இந்திய சமா தான ஒருமைப்பாட்டு கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் ஜீவானந்தம், நிர்வாகிகள் முருகன், கலைநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.