‘சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி லஞ்சம், ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு பகுதிக்குழு சார்பில் திருவொற்றியூர் தேரடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பகுதிச் செயலாளர் ஆர்.கருணாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆண்ட்ரூஸ், அருமைராஜ், ஸ்டாலின், அன்பு, கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் வடக்கு பகுதிக்குழு சார்பில் சத்தியமூர்த்தி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.முத்துசாமி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, வெங்கட்டையா, சுரேஷ், ராஜ்குமார், புஷ்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.