tamilnadu

img

மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 14) அம்பத்தூர் ஆர்.டி.ஓ.அலுவலகம் முன்பு சென்னை பெருநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.ராயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் வி.குப்புசாமி, மாவட்டத் தலைவர் பி.என்.உண்ணி, சு.பால்சாமி, சிதம்பரம் உள்ளிட்டோர் பேசினர். இதேபோல் திருவண்ணாமலை நகர வேன் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் தென்னிந்திய சுற்றுலா வாகன  ஓட்டுநர்கள் நலச் சங்கம்,  தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம், மாவட்ட டூரிஸ்ட் கார், வேன் ஓட்டுனர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து  கொண்டனர்.