tamilnadu

img

ஏழைகளின் வீடுகளை இடிப்பதா: உளுந்தூர்பேட்டையில் முற்றுகை

உளுந்தூர்பேட்டை, நவ. 30- உளுந்தூர்பேட்டை நகரத்தில் பல்வேறு இடங்களில் மூன்று தலைமுறைகளுக்கு மேல்  வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை குடும்பத்தி னரின் வீடுகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று  கூறி இடித்து தள்ளுவதற்கு முயற்சிக்கும் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி, வரு வாய்த்துறை, பொதுப்பணித் துறையினரின் நடவடிக்கையை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவு எனக்கூறி ஏரியை ஒட்டி  வீடு கட்டி வாழ்ந்து வரும் சுமார் நூற்றுக்கும்  மேற்பட்ட ஏழை மக்களின் வீடுகளை அப்பு றப்படுத்த வேண்டும் என உளுந்தூர்பேட்டை  வருவாய்த்துறை, பேரூராட்சி, பொதுப்பணித் துறை நிர்வாகம் சார்பில் தண்டோரா போடப்  பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த  பகுதி மக்கள் வெள்ளியன்று (நவ. 29)  உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நீதி மன்ற வளாகம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள் ளன. அங்கிருந்து கொண்டே ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிக்க வேண்டும் என உத்தரவிடுவது எந்த வகையில் நியாயம் என  சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.  இந்த குடியிருப்புகளுக்கு சிமெண்ட் சாலை, மின்சார வசதி, ரேஷன், ஆதார் கார்டு,  வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட  குடிமக்களுக்கான அனைத்து அடையா ளங்களும் அரசு நிர்வாகத்தால் வழங்கப் பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது. போராட்டம் நடத்திய பொதுமக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகன், டி.எம். ஜெய்சங்கர், நகரச் செயலாளர் கே.தங்க ராசு, மதிமுக இளைஞரணி நிர்வாகி க.சத்யா,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் அறிவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு முன் திரண்டு கோஷம்  எழுப்பினர். இதையடுத்து தற்காலிகமாக  ஆக்கிரமிப்பு அகற்றுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.