கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய கணினி தரவுகளை மீட்டு எடுக்கவும், நலவாரிய பணப்பயன்களை உயர்த்தி வழங்க கோரி சிஐடியு சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.கருப்பையன் தலைமை தாங்கினார். மாநில உதவி பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன், மாவட்ட செயலாளர் டி.பழனிவேல், பொருளாளர் எம். சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.