சிதம்பரம், மே 22- கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 50 நாட்க ளுக்கும் மேலாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுத் தலங்களில் படகு ஓட்டும் தொழிலா ளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப் பேட்டை ஒன்றியத் தலைவர் ரமேஷ் பாபு தலைமையில் பிச்சாவரம் சுற்றுலா படகு ஓட்டும் தொழிலாளர் கள் தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 21ஆம் தேதி முதல் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா படகு ஓட்டு தளத்தில் எந்த படகும் இயக்கப்பட வில்லை. கடந்த 30 ஆண்டுகளாக 53 குடும்பங்கள் இங்கு படகு ஓட்டு வதை நம்பி வாழ்க்கை நடத்தி வருகி றோம். அரசின் ஊரடங்கு உத்தரவால் படகுகள் ஓடாததால் எங்கள் வாழ்வா தாரம் மொத்தமாக பாதிக்கப் பட்டுள்ளது.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள்தான் விடுமுறைகளையொட்டி அதிகள வில் கூட்டம் வரும். நாங்களும் இப் போதுதான் வருமானம் ஈட்ட முடி யும். ஆனால் இப்போது மொத்த மாக எங்கள் வாழ்வாதாரம் முடங்கிக் கிடப்பாதால் நாங்கள் மிகவும் வறு மையில் உள்ளோம். மார்ச் மாத பாதிப்புக்காக எங்கள் துறை சார்பில் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் ஏப்ரல், மே மாதங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை. எனவே பிழைக்க வேறு வழி இல்லாத நிலையில் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கேட்டு, நாங்கள் எங்கள் குடும்பங்களுடன் வருகின்ற திங்கட்கிழமை (மே 25) உண்ணா நிலை போராட்டம் மேற்கொள்வ தென முடிவு செய்துள்ளோம். எனவே தாங்கள் தலையிட்டு எங்கள் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் நகல் சுற்றுலா துறை ஆணையருக்கு அனுப்பி யுள்ளனர். மேலும் சிதம்பரம் காவல்துறை டிஎஸ்பி-யிடமும், வட்டாட்சியரிடமும் நேரில் அளிக்கப் பட்டுள்ளது.