நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ள நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த நடிகை மீரா மிதுன் கடந்த ஆண்டு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத மீராமிதுனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் மீரா மிதுன் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் தனது மகளை பாதுகாப்பான முறையில் மீட்டுத்தருமாறு அவரது தாயார் ஷியாமளா சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக போலீசார் மீரா மிதுனை தேடியும் கிடைக்காததால் அவருக்கு லுக் அவுட் நோடீஸ் வழங்க மத்திய குற்றப்பரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.