tamilnadu

img

திடீர் மழையால் சேதமடைந்த 10 டன் நெல் மூட்டைகள் கூட்டடி கிராம விவசாயிகள் வேதனை

திடீர் மழையால் சேதமடைந்த  10 டன் நெல் மூட்டைகள் கூட்டடி கிராம விவசாயிகள் வேதனை

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததால், திடீரென பெய்த மழையில் 10 டன்னுக்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் வேதனை அடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே கூட்டடி கிராமத்தில் 1500 கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் முழுவதும் விவசாயத்தையே பிரதான தொழி லாக செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டு, தங்கள் நிலத்தில் விளைந்த நெல் மணிகளை அங்குள்ள அரசுப் பள்ளி அருகில் வெட்ட வெளியில் கொட்டி வைத்து, பிறகு, விற்பனை செய்வதை வழக்க மாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம், நிரந்தரமான நேரடி கொள்முதல்  நிலையம் கிடையாது. இந்த ஆண்டுக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுவரைக்கும் திறக்கப்படவில்லை.  இந்த நிலையில், அறுவடை முடிந்து ஒரு மாதம் ஆகியும் கொட்டி வைத்த நெற் மணிகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். சனிக்கிழமை (மார்ச் 1) அதி காலை பெய்த திடீர் கன மழையின் காரணமாக சுமார் 10 டன் மூட்டை நெல் முழுமையாக சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு சாலையில் மாட்டு வண்டிகள் குறுக்கே போட்டு மறிய லில் ஈடுபட்டனர். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த திருநாவலூர் போலீசார் விவ சாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட நெல் மணிகளை  அரசே  கொள்முதல் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக உறுதியளித்தனர். இதையடுத்து,மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.