tamilnadu

img

22 சிவப்பு மண்டல மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும்... தமிழக அரசு அறிவிப்பு

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த 2 நாட்களாக மந்தமான வேகத்தில் உள்ள நிலையில், மத்திய அரசு நாட்டில் உள்ள 170 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதாகவும் அந்த மாவட்டங்களைச் சிவப்பு மண்டல பகுதிகள் என தரம் பிரித்துள்ளது. அவ்வாறு பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 22 சிவப்பு மண்டல மாவட்டங்களில் (ஹாட்ஸ்பாட்) ஊரடங்கு தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள 22 சிவப்பு மண்டல மாவட்டங்கள்: 
1.சென்னை 2.திருச்சி 3.கோவை 4.மதுரை 5.நெல்லை 6.ஈரோடு 7.வேலூர் 8.திண்டுக்கல் 9.விழுப்புரம் 10.திருப்பூர் 11.நாமக்கல் 12.செங்கல்பட்டு 13.தேனி 14.தூத்துக்குடி 15.கரூர் 16.விருதுநகர் 17.கன்னியாகுமரி 18.கடலூர் 19.திருவள்ளூர் 20.திருவாரூர் 21.சேலம் 22.நாகப்பட்டினம் ஆகிய 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டல மாவட்டங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. 15 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித்துள்ள மாவட்டங்கள் சிவப்பு பகுதிக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;