tamilnadu

img

சென்னை காஞ்சிபுரம் ஈரோடு  மாவட்டங்களில் மார்ச் 31 வரை ஊரடங்கு 

கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து மார்ச் 31 வரை  தமிழகத்தின் சென்னை காஞ்சிபுரம் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 370 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும்  கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் இந்தியாவில் இன்று ஒரேநாளில்  கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.  இதனை தொடர்ந்து, இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புள்ள 75 மாவட்டங்களில் அனைத்து செயல்பாடுகளையும் முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  அவசர தேவைகளை தவிர மற்றவற்றை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது.  இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு தேவைப்பட்டால் மேலும் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.