tamilnadu

img

கடலூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கடலூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

புதிய பேருந்து நிலைய விவகாரம்

கடலூர், மே13- கடலூரில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலைய பிரச்சினை குறித்து அனைத்து கட்சிகள், குடியிருப்போர் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பாக ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடைபெற்றது. கடலூர் புதிய பேருந்து நிலையத்தை கடலூரின் மையப் பகுதியில் அமைக்க வலியுறுத்தியும், கடலூரில் இருந்து பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எம்.புதூரில் பேருந்து நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும்,  திருப்பாதிரிப்புலியூரில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த கோரியும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். விசிக நாடாளுமன்ற செயலாளரும், துணை மேயருமான பா.தாமரைச்செல்வன் துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், விசிக அமைப்பு செயலாளர் வழக்கறி ஞர் தி.ச.திருமார்பன், நகர செயலாளர் ராஜ துரை, காங்கிரஸ் மாவட்ட துணைத் தலை வர் பாண்டுரங்கன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் குளோப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் இஸ்மாயில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம்  உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். மீனவர் அணி செயலாளர் கார்த்திக், மீனவ பேரவை நிறுவன தலைவர் பெரு.ஏகாம்பரம், குடியிருப்போர் சங்க சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், செயலாளர் பி.வெங்கடேசன், தலைவர் பாலு.பச்சையப்பன், பொருளாளர் வி.ரமணி,  மக்கள் அதிகாரம் மாவட்டச் செய லாளர் பாலு, நகர செயலாளர் ரவி, கடலூர் பொதுநல அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் எஸ். என்.கே.ரவி, தனியார் பேருந்து ஓட்டுநர் சங்க தலைவர் குரு ராமலிங்கம், கடலூர் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் எஸ்.கே.பக்கீரான், மஞ்ச குப்பம்  பாலாஜி, மாவட்ட இணைச் செயலாளர் சதீஷ், பான்பரி மார்க்கெட் ராஜா, மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் சௌமியா, வாலிபர் சங்க மணி கண்டன் உள்ளிட்டோர் பலர் பேசினர்.