நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் இரண்டாவது துணை கமிட்டியினர் சென்னை ஆவடியில் சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் இன்று பொங்கல் விழாவைக் கொண்டாடினர். கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பொங்கல் விழாவில் பல கலாச்சார நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. உள்ளூர் நடனங்களும் அதில் இடம் பெற்றன. ஆவடி சி.ஆர்.பி.எப். குரூப் மையத்தின் டி.ஐ.ஜி.யான திருமதி சோனால் வி. மிஸ்ரா, ஐ.பி.எஸ்., சி.ஆர்.பி.எப். அலுவலர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பெருமளவில் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.