மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மூன்று மாற்றுத் திறனாளிகளுக்கு சனிக்கிழமையன்று (ஜன.25) மோட்டார் வாகனத்தை வழங்கினார். சென்னையில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மொத்தத்தில் 70 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் வாகனம் வழங்கியுள்ள டி.கே.ரங்கராஜன், மேலும் 10 பேருக்கு வழங்க பரிந்துரைத்துள்ளார்.