tamilnadu

img

சிபிஎம் தீர்மானம் .... (கொரோனா பரவல்)

தனியார் மருத்துவமனைகளில்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்க!

தனியார் மருத்துவமனைகளை அரசுகையகப்படுத்தி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேநேரத்தில் கொரோனா அல்லாத நோய்களுக்குஅரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை இடைக்காலமாக நியமித்தது.தற்போது மினி கிளினிக்குகளிலும் தற்காலிகமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதோடு, அனைத்து மருத்துவ மற்றும் முன்களப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். போதுமான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் புதிதாக பணியமர்த்தப்பட வேண்டும்.

பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் இல்லாத சூழலில் பணியாற்றுகின்றனர். இவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் ரூ. 2 லட்சம்,மரணமடைந்தால் ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவருக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் கூறியது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பெரும் மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர். இது கொரோனா தடுப்புப் பணியை பாதிக்கும்.எனவே, அரசு அறிவித்தபடி நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

                              *************

உரவிலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!

மத்திய பாஜக அரசு, உரத்தின் விலைகளை உற்பத்திசெய்யும் கம்பெனிகளே தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதன் விளைவாக, உரங்களின் மொத்த விற்பனை விலை கடந்த ஆண்டை விட 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சில்லரை விற்பனை விலையும் 50 கிலோ மூட்டைக்கு 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு விவசாயிகள் மீதான மற்றொரு கொடூரமானத் தாக்குதலாகும்.
ஏற்கனவே, விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை நிறைவேற்றி விவசாயத்தை கார்ப்பரேட் கொள்ளையடிக்கும் துறையாக மாற்றியுள்ளது. அதை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஐந்து மாத காலமாக வர
லாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் விவசாயிகளை மேலும் சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் உரத்தின் விலைகளை உயர்த்தியிருப்பது வன்மையான கண்டத்திற்குரியது.

மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் ஏற்கனவே  (பட்ஜெட்டில்) உயர்த்தியது. இதனால், டீசல் என்ஜினை பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளின் உற்பத்திச்செலவு அதிகரித்தது. தற்போது உரவிலை உயர்வு காரணமாக உற்பத்திச்செலவு மேலும் அதிகரித்து விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, உடனடியாக உரவிலை உயர்வை ரத்து செய்ய மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.விவசாயிகள் மீதான மத்திய அரசின் அடுக்கடுக்கான தாக்குதல்களுக்கு எதிராக கண்டனக் குரலெழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                              *************

மதுபானக் கடைகளை மூடுக!

தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதும் மதுபானக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. மதுபான கடைகள் மூடப்பட வேண்டும்.தமிழக அரசு உடனடியாக கொரோனா தொற்று இரண்டாவது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு அரசின் புதிய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுவோர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.

;