games

img

மின்னல் வேகத்தில் கொரோனா பரவல்... ஒலிம்பிக் கமிட்டி அதிர்ச்சி...

ஒலிம்பிக் நடைபெறும் ஜப்பான் தலைநகர் டோக்கியோ பகுதியில் தினசரி கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு 1,300-க்குள் இருந்த நிலையில், ஒவ்வொரு நாளும் 10 மடங்கு கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. முக்கியமாக ஒலிம்பிக் கிராம பகுதிக்கு அருகில் உள்ள இடங்களில் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில் சனியன்று புதிய உச்சமாக 4,058 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு பட்டியலில் ஒலிம்பிக் கிராமத்தில் இருக்கும் சில நபர்கள், அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் என பலரும் மருத்துவமனை மற்றும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் தொடர் நிறைவு பெற இன்னும் 8 நாட்கள் (ஆகஸ்ட் 8) உள்ள நிலையில், கொரோனா பரவலின் வேகம் நாள்தோறும் அதிகரித்து வருவது சர்வதேச மற்றும் ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டிகளுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.

;