தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிபிஎம் நிவாரணம்
சென்னை, ஜூன் 25 - மயிலாப்பூர் பகுதி, 123வது வட்டம் பல்லக்கு மாநகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளது. இங்குள்ள இ பிளாக் எண்-29ல் பிரபு-நந்தினி, கோபி-தெய்வானை என இரண்டு குடும்பங்கள் வசித்து வந்தன. கடந்த 15ந் தேதி மின்கசிவு காரணமாக வீடுகள் தீக்கிரையானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதனன்று (ஜூன் 25) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, எம்.சரஸ்வதி எம்.சி. ஆகியோர் வழங்கினர். பல்லக்கு மாநகர் கிளைச் செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.