திருவாரூர், டிச.21 - நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இழிவான பேச்சைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமையும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கோபிநாத் தலைமை ஏற்றார். சிபிஎம் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செயலாளர் டி.லெனின் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நன்னிலம் ஒன்றியம் பேரளம் கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரளம் ஒன்றியச் செயலாளர் ஜி.செல்வம் தலைமை வகித்தார். நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு. ரஜினி காந்த், சிபிஐ ஒன்றியச் செயலாளர் செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜெ.முகமது உது மான், கே.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
மன்னார்குடி தேரடியில் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு பிரகாஷ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, ஒன்றியச் செயலாளர் கே.ஜெய பால் உள்ளிட்டோர் பேசினர். மாவட்டச் செயலாளர் டி.முருகையன் கண்டன உரையாற்றினார்.
ஒன்றியச் செயலாளர் டி.ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.கந்தசாமி கண்டன உரையாற்றினார்.
திருச்சிராப்பள்ளி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்டக் குழு சாரபில் ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றி செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பி னர்கள் எம்.ஜெயசீலன், ஆர்.ராஜா உள்ளிட்ட பலர் அம்பேத்கர் முகமூடி அணிந்து அமித்ஷாவுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநகர செயலாளர் புதுகை எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர் அ.மணவாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே மார்க்சிஸ்ட் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் எம்.நாராயண மூர்த்தி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எல்.அலாவுதீன் முன்னிலை வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கவிவர்மன் கண்டன உரை யாற்றினார்.
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் மலை.தேவேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் அரசு விரைவுப் போக்குவரத்து போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பட்டுக் கோட்டை சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மூத்த தோழர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எம்.செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். வாசு, எஸ்.பாலகிருஷ்ணன், கு.பெஞ்சமின், என். கந்தசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர்.
கும்பகோணம்
இந்திய மாணவர் சங்கத்தின் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக திருநாகேஸ்வரம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் தருண் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராகுல் கண்டன உரையாற்றினார். கிளை செயலாளர் மகாராஜா நன்றி கூறினார்.
பெரம்பலூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமை பெரம்பலூர் புதிய பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்டன உரை யாற்றினர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெள்ளியன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செய லாளர் பழ.வாஞ்சிநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர். மாவட்டக் குழு, ஒன்றியக் குழு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள், வாலிபர், மாதர், சங்க பொறுப்பாளர்கள் டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்தை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கரூர்
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் கரூர் மாவட்டக் குழு சார்பில் பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஆர்.ஹோச்சுமின் தலைமை வகித்தார். சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலச் செய லாளர் வ.கல்யாணசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜா முகமது, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை பொறுப் பாளர் எம்.தண்டபாணி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் ஒன்றியம் பாப்பா கோவில் ஊராட்சி கடைத்தெருவில் நடைபெற்ற போராட்டத் தில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினருமான நாகை மாலி கண்டன உரையாற்றினார். நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல் தலைமை வகித்தார். நாகை நகரச் செயலாளர் க.வெங்க டேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எம். அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிக்கல் கடை தெருவில் நாகை வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வி. ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன் கண்டன உரையாற்றினார். சாட்டியகுடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. சுபாஷ் சந்திரபோஸ் கண்டன உரையாற்றினார். திருப்பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.லதா கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் இடதுசாரிகள், திமுக கூட்டணி கட்சியினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிறுபான்மையின நலச்சங்கம் மற்றும் மாணவர், வாலிபர், மாதர் சங்கங்களின் ஒன்றிய, மாவட்ட, மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர்.