tamilnadu

img

பெட்ரோல் - டீசல்- கேஸ் விலை உயர்வுக்கு எதிராக சிபிஎம் போராட்டம்...

மத்திய பாஜக அரசு உயர்த்தியிருக்கும்அநியாய பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டக்குழு சார்பில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் புதனன்று(பிப்.17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ப. செல்வசிங், மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், ஆர்.லோகநாதன், கார்தீஷ்குமார், விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். (மேலும் செய்தி - 5)

;