tamilnadu

img

ரயில்வே மேம்பாலப் பணியை துவக்க கோரி சோத்துப்பாக்கத்தில் சிபிஎம் தர்ணா

ரயில்வே மேம்பாலப் பணியை துவக்க கோரி சோத்துப்பாக்கத்தில் சிபிஎம் தர்ணா'

செய்யூர்-வந்தவாசி சாலையில் ரயில்வே இருப்பு பாதையை கடக்கும் இடத்தில் நிதி ஒதுக்கியும் மேம்பாலம் பணிகள் துவங்காமல் உள்ளதால்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தர்ணா நடைபெற்றது.  செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப் பாக்கம் பகுதியில் சென்னை திருச்சி இடையிலான மேல்மருவத்தூர் ரயில் பாதையில், செய்யூர்-வந்தவாசி செல்லும் சாலையில் ரயில்வே கேட் (எல்சி-74) அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது. மேலும், இந்த இருவழி ரயில் பாதையில் ரயில்கள் வருவதை யொட்டி அடிக்கடி ரயில்வே கேட் மூடப் படுகிறது. இதனால் வாகன ஓட்டி களும் பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. அதனால், இந்த ரயில் கேட் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சிபிஎம், விதொச, வாலிபர், மாணவர்,மாதர் சங்கத்தினர் ஒன்றிணைந்து கையெ ழுத்து இயக்கம் நடத்தி ஒன்றிய அரசு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர் போராட்டத்தின் விளை வாக உயர்மட்ட மேம்பாலம் அமைப்ப தற்காக ரயில்வே துறை ரூ.31.87 கோடியை ஒதுக்கியது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பணிகளை தொடங்கி வைத்தார். ஆனால், இது வரைக்கும் கட்டுமான பணிகள் தொடங் குவதற்கான பூர்வாக பணிகள் கூட நடை பெறவில்லை. இந்நிலையில், சிபிஎம் செய்யூர் வட்டச் செயலாளர்  க.புருஷோத்தமன் தலைமையில் சோத்துப்பாக்கம் கூட்டு சாலை அருகில் இந்த போராட்டம் நடைபெற்றது.   கோரிக்கைகளை விளக்கி செய்யூர்  வட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.கோவிந்தசாமி இ.ராமமூர்த்தி, எம்.ஐயப்பன், ஜி.முகுந்தன் எம்.ஜானகி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.ரவி,  எம்.வெள்ளி கண்ணன்,  மாதர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் க.ஜெயந்தி, மாவட்டக் குழு உறுப்பினர் நவரத்தி னம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்ட செயலாளர் ஜி.ராஜேந்திரன், ஸ்டாலின் குமார் உள்ளிட்ட பலர் பேசி னர்.