tamilnadu

img

அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஆக. 30- முத்தியாள்பேட்டை தொகுதி மக்க ளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி முத்தியாள்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கசாப்புக்காரன் தோப்பு குடிசைவாழ் மக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். சோலை நகர் தெற்கு பகுதி யில் அமைந்துள்ள  சுனாமி குடியி ருப்பில் வசிக்கும் மக்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம்  பிரதேசக்குழு உறுப்பினர் ஆர்.சரவ ணன் தலைமை தாங்கினார். பிரதேசச் செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர்  பெருமாள், மூத்த பிரதேசக்  குழு உறுப்பினர்  முருகன், நகரச்  செயலாளர்  மதிவாணன், பிரதேசக்குழு  உறுப்பினர்கள் கலியமூர்த்தி,  சந்திரா, கிளைச் செயலாளர் கலையரசி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார்கள்.