tamilnadu

img

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசை கண்டித்து சிபிஎம் பிரச்சாரம்

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசை கண்டித்து சிபிஎம் பிரச்சாரம்

புதுச்சேரி, ஜூன் 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி நகரத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியை கண்டித்து பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ஏ.எப்.டி., சுதேசி, பாரதி பஞ்சாலைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய பிரச்சாரத்தில் நியாயவிலைக் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்க வேண்டும், நகரப் பகுதிகளில் போக்குவரத்தை சீர்செய்ய மேம்பாலங்களை கட்ட வேண்டும், அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். முத்தியால்பேட்டை கசாப்புக்காரர் தோப்பில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்டது. புதுச்சேரி காந்தி வீதியில் தொடங்கிய பிரச்சாரத்திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் வீ. ஜோதிபாசு தலைமை தாங்கினார். கட்சியின் மூத்தத் தலைவர் தா. முருகன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் ஜி. சீனுவாசன், மாநில குழு உறுப்பினர்கள் சரவணன், மதிவாணன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். முத்தியால்பேட்டை மணி கூண்டு, மார்க்கெட், சோலை நகர், கசாப்புகாரர் தோப்பு ஆகிய பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.