திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில், திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன் மற்றும் வை.செல்வராஜ் ஆகியோர் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.