பாஜக தலைமையிலான ஆட்சியின் தோல்விகள், மாநிலத்தில் அதிகரித்து வரும் சட்டமீறல்கள், காவல்துறையின் செயலற்ற தன்மை ஆகியவற்றை கண்டித்து திரிபுரா மாநிலம் அகர்தலாவில் சிபிஐ(எம்) மாநிலக்குழு சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார், மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி, மத்தியக் குழு உறுப்பினர் ரமா தாஸ், முன்னாள் அமைச்சர்கள் தபன் சக்ரவர்த்தி, மாணிக் டே, பபித்ரா கர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.