tamilnadu

இன்று பள்ளிகள் திறப்பு : மாணவ, மாணவியர்களுக்கு சிபிஐ (எம்) வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் நாளை (10.06.2024) திறக்கப்படவுள்ளன. 

விடுமுறையை முடித்து பள்ளி களுக்குச் செல்லும் அனைத்து மாணவ,  மாணவியருக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்வதோடு, கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்கி முன்னேற்றமடைய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறோம்.

நீண்ட விடுமுறைக்கு பிறகு திறக்கப் படும் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள்,  விளையாட்டு மைதானம், பள்ளிப்பேருந்து கள் உள்ளிட்டவை அனைத்தும் விதிகளின் படி முறையாக பராமரிக்கப்படுவதையும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படுவதையும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்திட வும், உரிய காலத்தில் அனைத்து மாணவர் களுக்கும் பாடநூல்கள் வழங்கப்படுவதை யும் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.