tamilnadu

img

பராமரிப்பு இல்லாத பருத்திப்பட்டு பூங்கா

ஆவடி, பிப். 11- ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பருத்திப்பட்டு பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.2.06 கோடி செல வில் அமைக்கப்பட்ட பூங்கா கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இந்த பூங்கா சுமார் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. இதில் 647 மீட்டர் நீளத்திற்கு நடை பாதையும், குழந்தைகளுக்கான 3 நவீன ஜிம்கள், 6 சறுக்கு மரங்கள் 6 ஊஞ்சல்கள், 2,900 சதுர மீட்டர் எழில்மிகு பசுமை தோட்டங்கள், 2 நீரூற்றுகள், 40 இருக்கைகள், 59 வண்ண விளக்கு கள் மற்றும் நவீன கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டன. பருத்திப்பட்டு, அசோக் நிரஞ்சன் நகர், கோவர்தனகிரி, வி.ஜி.என். குடியிருப்பு, மகேந்திரா சிட்டி ஹேப்பி ஹோம், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பூங்காவை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் முதியோர், பெண்கள் நடை பயிற்சியும், குழந்தைகள் விளையாடி யும் மகிழ்கின்றனர்.  பூங்கா சரியான பராமரிப்பு இல்லாததால், செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக் கிறது. மேலும் பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்கள் அதிகமாக நடமாடி வருகின்றன. இதனால் பெரியவர் முதல் சிறியவர் வரை அச்சத்துடன் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். மேலும் பூங்காவில் நடைபாதையும், பூச்செடிகள் அமைந்த இடமும் ஒரே சமமாக இருப்பதால் மழையின் போது நடைபாதையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.  இங்குள்ள நடைபாதை சில  இடங்களில் உடைந்து போயுள்ளது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற் கொள்ள வரும் பெண்கள் முதியோர் மிகவும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் நடைபாதையில் உள்ள தண்ணீரில் பாசி படர்ந்து இருப்பதால், பொதுமக்கள் வழுக்கி கீழே விழுகின்றனர். மேலும், இங்குள்ள மின் விளக்குகள் சில எரிவது இல்லை. இதனால் இரவில் சில இடங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதி கள் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுமட்டு மில்லாமல் இங்குள்ள கழிப்பறைகள் மூடியே கிடக்கின்றன. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மக்கள் அவதிப்படு கின்றனர். மேலும் இங்கு இளைஞர்க ளுக்காக உடற்பயிற்சி உபகர ணங்கள் அமைக்கவில்லை. இத னால் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய தனியார் உடற்பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டி யுள்ளது. பூங்கா அருகிலேயே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த பூங்காவை முறையாக பயன்படுத்த முடியவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் பருத்திப்பட்டு பூங்காவை முறையாக பராமரிக்க வும், அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.