சென்னை, மார்ச் 6- சென்னையில் உள்ள நீர்நிலை கள் மற்றும் கால்வாய்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்க டிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியை, சென்னை மாநகராட்சி தொடங்கி யுள்ளது. இதனையடுத்து, ஓட்டேரி நல்லா கால்வாயில் டிரோன் கொண்டு மருந்து தெளிக்கும் பணிகளை அமைச் சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர்பிரியா பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர், “பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலை ஓரங்க ளில் மழை நீர் வடிகால் பகுதி களில் கால்வாய்களில் தொடர்ந்து கொசு மருந்து தெளிக்கப்பட்டு வரு கிறது. கொசுத்தொல்லை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், கொசு ஒழிப்பு பணிகள் வீடு வீடாகவும், நீர்நிலைகளிலும் தீவிர மாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட்டத்திற்கு இரண்டாக 6 ட்ரோன்கள் மூலம் கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
டெங்கு, மலேரியா பரவலைக் கட்டு ப்படுத்தவும், கொசு உற்பத்தியைத் தடுக்கவும் பொதுமக்களிடையே விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 31 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்த நிலையில்,இந்த ஆண்டு 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைந்துள்ளது எனக் கூறிய அவர், குடியிருப்புகள், தனியார் நிறு வனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் சூழல் இருந்தால், அப ராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் காலியாக உள்ள மருத்து வர்கள், செவிலியர்கள் காலிப் பணி யிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வரு வதாகவும், தேர்தலுக்குப் பிறகு பணி யிடங்கள் நிரப்பப்படும்” என்றும் கூறி னார்.