tamilnadu

கொரோனா தொற்றால் மின் ஊழியர் பலி

சென்னை, ஜூன் 8 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை கிளை நிர்வாகி டி.தனசேகர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 53. வேப்பேரி பிரிவு மின்சார வாரிய அலுவலகத்தில் பணி  புரிந்து வந்த தனசேகர்,  சங்கத்  தின் எழும்பூர் கோட்ட முன்  னணி ஊழியராவார். கொரோனா தொற்றுடன் ஜூன்  1 அன்று ஓமந்தூரார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட தனசேகர், சிகிச்சை பல னின்றி திங்களன்று (ஜூன் 8) உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர்  தி.ஜெய்சங்கர், பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல்  தெரிவித்துள்ளனர்.