tamilnadu

img

கொரோனா பாதிப்பால் அதிமுக எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி

சென்னை:
திருபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழனி கொரோனா பாதிப்பால்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. சென்னையில் தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் திருபெரும்புதூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர்  ஜெ.அன்பழகன் கொரோனா நோயால் உயிரிழந்தார். இந்நிலையில், மற்றொரு சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

;