tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று...

சென்னை 
தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. குறிப்பாக 7 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்த விஷயம் தமிழக மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் முழுவதும் 3,882 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 94 ஆயிரத்து 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 63 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா வார்டில் இருந்த 2,582 பேர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 926 ஆக உயர்ந்துள்ளது. வழக்கம் போல மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 2,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 60 ஆயிரத்தை (60,533) தாண்டியுள்ளது. சென்னைக்கு அடுத்து மதுரையில் 297 பேரும், செங்கல்பட்டில் 226 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 36 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   

;