tamilnadu

img

கொரோனா பாதிப்பு: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை....

சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்புநடவடிக்கைகள் குறித்துஅமைச்சர்கள், அதிகாரி களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று ஆலோசனை நடத்துகிறார். 

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைதாக்கம் வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மேலும் கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்  அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனையில் அமைச் சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறி த்து ஆலோசிக்கப்படுகிறது. இதன்பிறகு ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

;