சென்னை,மார்ச் 8- உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் கொரோனா தொற்று தமிழகத்து க்கும் பரவலாம் என்று அச்சம் இருந்து வந்தது. இதனால் ரயில் நிலையங்களிலும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அந்தவகையில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படையினர் கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், அரக்கோணம் உள்பட அனைத்து ரெயில் நிலையங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு ப்படையினர் சனிக்கிழமை முதல், முகக்கவ சங்கள் அணிந்து பணி செய்து வருகின்றனர். பயணிகளிடம் டிக்கெட் சோதனையில் ஈடுபடும் பரிசோதகர்கள் உள்பட அனை வரும் முகக்கவசங்களுடன் காணப்பட்டனர். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படையினருக்கு சென்னை கோட்ட மூத்த பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில் குமரேசன் முகக்கவ சங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து விமானநிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்படும் பரிசோதனை போன்று ரெயில் நிலையங்களிலும் பயணிகள் பரிசோதிக்கப்படுவார்கள் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.