tamilnadu

கொரோனா சிகிச்சை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்யக் கோரிக்கை

சென்னை, ஆக. 2- சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு  அதிகம் கட்டணம் வசூலித்த தனியார் மருத்து வமனையின் அனுமதியை சுகாதாரத்துறை ரத்து செய்தது. இதேபோல் அதிக கட்ட ணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனை களில்் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் அரசு மருத்து வமனைகளில் மட்டும் கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர்  குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளுக் கும் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட் டது. இதையடுத்து தனியார் மருத்துவமனை களில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்ட ணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது.  அதன்பின்னர் தனியார் மருத்துவமனை களில் கொரோனா சிகிச்சைக்கான கட்ட ணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்தது.  இந்த கட்டணத்தை விட கூடுதலாக வசூ லித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் ‘பேக்கேஜ்‘ என்ற பெயரில் லட்சக்கணக்கில்  கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.  

இதையடுத்து சில மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘பீ வெல்’ என்ற தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து உள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது: கொரோனா நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் அதற்காக தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் சுகாதாரத்துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சென்னை, கீழ்ப்பாக்  கத்தில் உள்ள ‘பீ வெல்’ மருத்துவமனை யில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு  மேற்கொண்டபோது, அங்கு நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான கொரோனா  சிகிச்சைக்கு ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் வசூ லிக்கப்பட்ட விவரம் உறுதிசெய்யப்பட்டது.

மேலும், அந்த நபருக்கு அளித்த  சிகிச்சையில் அரசு வழங்கிய நெறிமுறை களின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும்  பயன்படுத்தப்படவில்லை. இதையடுத்து கூடுதல் கட்டணம் வசூலித்த ‘பீ வெல்’  மருத்துவமனைக்கு கொரோனா நோய்  சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனு மதி தற்காலிகமாக ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று கொரோனா சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்ப தாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.‌

ரூ.15 லட்சம் வசூல் 
இந்த மருத்துவமனை மட்டுமல்ல சூளை மேடு நெல்சன் மாணிக்கம் சாலையில்  அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனை யிலும் 15 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய்  கொரோனா சிகிச்சைக்காக தங்க சாலை யைச் சேர்ந்த பெண் நோயாளியிடம் வசூ லிக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்துள் ளன. அந்த மருத்துவமனை மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.