tamilnadu

img

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்கு கொரோனா

சென்னை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களும் இந்த நோய் தொற்றால் பெரிதும் பாதிப் படைந்து வருகின்றனர்.சென்னையில் ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி.க்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சென்னை போலீசில் நேற்று வரை 1,347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா தொற்று இருப் பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

;