tamilnadu

எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை....

சென்னை;
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 21-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வெள்ளியன்று காலை 10 மணி முதல் கொரோனா பரிசோதனை தொடங்கியது.சென்னையில் சட்டப் பேரவை குடியிருப்பு வளாகம், தலைமை செயலகம், கலைவாணர் அரங்கம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பரிசோதனை செய் யப்பட்டது.இந்த இடங்களில் எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள், சட்டசபை செயலக ஊழியர்கள் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

;