tamilnadu

img

புதிய உச்சத்தில் கொரோனா பரவல்...  தமிழகத்தில் மேலும் 4,343 பேருக்கு பாதிப்பு...  

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 7 நாட்களாக தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியிருந்த நிலையில், இன்று புதிய உச்சமாக 4,343 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரேநாளில் 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1321 ஆக அதிகரித்துள்ளது. 

வழக்கம் போல இன்றைய தமிழக கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 2,065 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியது. ஆறுதல் செய்தியாக தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 21 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சதவீதம் 57 ஆக உயர்ந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.   

;