tamilnadu

img

திருச்சியிலும் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்

சென்னை:
கொரோனா தொற்று தாக்கம் தொடக்கத்தில் சென்னையில் அதிகரித்து இருந்த நிலையில் தற்போது தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மருந்தோ, தடுப்பூசியோ இன்னும் கண்டுபிடிக்கப் படாத நிலையில், அதைக் கட்டுப்படுத்த கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் உதவி வருவதாக சித்த மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. சென்னையில் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 3 இடங்களில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 600-க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதே போல், திருச்சியிலும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ சிகிச்சை மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்காக ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் ஒரு பகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

;