சென்னை
மாநிலத்தின் வளர்ச்சி குறைவான மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் கொரோனா பரவல் அவ்வளவாக இல்லையென்றாலும் வெளி இடங்களிலிருந்து வருபவர்கள் அங்கு கொரோனாவை பரவ விடுகிறார்கள். தற்போது அங்கு 8 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து அரியலூருக்குச் சரக்கு வாகனங்கள் மூலம் வந்த தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கவே சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 2 சிறுவர்கள் உள்பட மொத்தம் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
மேலும் கோயம்பேட்டிலிருந்து அரியலூர் சென்ற 40-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஒரேநாளில் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரியலூர் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது. அங்கு மொத்த பாதிப்பு 28 ஆக அதிகரித்துள்ளது.