tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு 34,53,233 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை.இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. ஒன்று ஒரு நாளில் மட்டும் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,14,983-ஆக உயர்ந்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 14,044 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.