tamilnadu

img

கொரோனா ஒழிப்புப்பணி... அரசு-தொண்டு நிறுவனங்கள் பதிவுக்கு இணையதளம்....

சென்னை:
கொரோனா ஒழிப்பு பணியில் அரசுடன் இணைந்து செயல்பட தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா  2 ஆம் அலை பரவலை தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

பின்னர் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட் டங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மாநில அளவிலான இந்த ஒருங்கிணைப்புக் குழு தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மையத்தில் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் http://ucc.uhcitp.in/ngorgistration என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துமக்களுக்கு உதவும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவால் http://www.facebook.com/ tnngocoordination/ என்ற முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.மேலும், 8754491300 என்ற அலைபேசி எண் மூலமாகவும், tnngocoordination@gmail.com என்ற இணையதளம் வாயிலாகவும் மாநில ஒருங்கிணைப்புக் குழுவை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;