tamilnadu

img

கொரோனா தனிவார்டாக மாறுகிறது நேரு உள்விளையாட்டு அரங்கம்

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று அதிகரித்து வரும் எண்ணிக்கைக்கு ஏற்ப நேரு உள்விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்றப்படவுள்ளது.  சென்னையில் சுமார் 10 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கை சனிக்கிழமையன்று (மே 23) 624ஆக பதிவானது. ஏற்கெனவே, நந்தம்பாக்கம் வர்த்தக மையம் கொரோனா தொற்று வார்டாக மாற்றுப்பட்டு, அங்கு அறிகுறி இன்றி கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கம் 600 படுக்கை கொண்ட கொரோனா வார்டாக மாற்றப்படவுள்ளது.