tamilnadu

img

தமிழகத்தில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு...

சென்னை 
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ள நிலையில், சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு இன்று ஒரே நாளில் 178 பேர் வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாகத் தமிழகத்தின் தலைநகர் மண்டலமான சென்னையில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் செய்தியாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 635 ஆக உள்ளது.
 

;