சமையல் சிலிண்டர் எரிவாயு சிலிண்டர் விலை இன்று மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று திடீரென ரூ.50 உயர்ந்து ரூ 1,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ. 2,508-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் சிலிண்டர் விலை என்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.