சென்னை:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டைஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக் கூறி ஊராட்சிக்கூட்டத்தில் கீழே அமர வைத்து அவமரியாதை செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்குத்திட்ட ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. பட்டியலினத்தவர், பழங்குடி யினத்தவர் அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. சமத்துவம், ஜனநாய கத்திற்கும் எதிரான இழிசெயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.