சென்னை, மே 6- கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய சென்னையை சேர்ந்த 125 பேருக்கு கொரோனோ தோற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தொடர்ந்து சென்னை கோயம்பேடு வணிக வளாகம் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டது. இத னால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் அவரவர் சொந்த மாவட்டங்க ளுக்கு லாரிகள் மூலம் சென்றுள்ளனர். அதி லும் குறிப்பாக விழுப்புரம், கடலூர், அரிய லூர் மாவட்டங்களுக்கு சென்றவர்களில் வைரஸ் தொற்று பரவி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களை ஒட்டு மொத்தமாக மாவட்ட நிர்வாகம் முடக்கி வைத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள், வியாபாரி கள் அதனைச் சார்ந்த மற்ற நபர்களையும் கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் கோயம்பேடு வியாபாரிகள், வாடிக் கையாளர்கள், உறவினர்கள் உள்ளிட்டோ ருக்கும் கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 39 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் உறுதி செய்துள்ளது. இதற்கிடையில் சென்னை வேளச்சேரி யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்ட றியப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் கே.கே.நகர் மின்வாரியத் தில் பணி புரியும் களப்பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் அந்த13 பேரை யும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், சென்னையில் ராணுவ பயிற்சி மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால்உணவு தயா ரிப்பு ஊழியருடன் தொடர்புடையவர்கள் தனி மைப்படுத்தப்பட்டனர்.