விழுப்புரம், டிச.11- வெள்ள நிவாரணம் மற்றும் பண்டிகை கால போனஸ் வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று (டிச.11) விழுப்புரத்தில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெஞ்சால் புயல் வெள்ளம், கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களின் வீடுகள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் இன்றி வறுமையில் வாடும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண மாக ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் ஆக ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கட்டு மானத் தொழிலாளர் சங்கத் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, துணைத் தலைவர் பி.குமார், கட்டுமான தொழி லாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எம்.முருகன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஆர்.சேகர், டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கணபதி, அங்கன்வாடி மாவட்டச் செயலாளர் ஆர்.மலர்விழி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கொடுத்தனர். முடிவில் துணை செயலாளர் அந்தோணி தாஸ் நன்றி கூறினார்.