திருவள்ளூர், ஜூன் 12- மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாசனாம்பட்டு இருளர் இன குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு நிதி வழங்க வேண்டுமென தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது
திருவள்ளூரில் இருந்து 37 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள திருமணி குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வாசனாம்பட்டு கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இருளர் இன மக்கள் கிராம நத்தம் நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர். குடிமனை பட்டா உள்ளிட்ட எந்த அடிப்படை தேவைகளும் இன்றி 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு குடிமனை பட்டா, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நூறு நாள் அட்டை போன்ற ஆவணங்கள் வழங்க வேண்டும் என தொடர்ந்து மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
இதையொட்டி வாசனாம்பட்டில் மொத்தம் 11 தொகுப்பு வீடுகள் கட்டப் பணி உத்தரவை கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார். இரண்டு மாதங்களாகியும், தவணை முறையில் வழங்கும் நிதி வழங்கவில்லை. பிடிஒ -விடம் கேட்ட தற்கு வங்கியில் பணத்தை செலுத்தி விட்டோம் என்கிறார்கள். வங்கியில் கேட்டால் பயனாளர்கள் பெயரில் எந்த பணமும் வரவில்லை என்று சொல்லு கின்றனர். இப்படி அப்பாவி மக்களை அதிகாரிகள் அலைகழிக்கும் போக்கு நடந்து வருகிறது. ஏற்கெனவே கையில் இருந்த பணத்தை கொண்டு தங்களால் முடிந்த அளவிற்கு கட்டு மான பணிகளை செய்து வந்துள்ளனர். ஒப்பந்ததாரர்களிடம் விடாமல் சொந்த உழைப்பை செலுத்தி வருகின்றனர்.
ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகளை கட்ட பணி ஆணை வழங்கி விட்டு, இதுவரை ஒரு தவணை நிதி கூட கடம்பத்தூர் பிடிஒ-வால் வழங்க வில்லை. தங்களிடம் உள்ள நகை களை அடகு வைத்தும், கடன் வாங்கி யும் தொகுப்பு வீடுகளை கட்டி வரு கின்றனர். கடன் பிடியில் சிக்கித் தவிக்கும் இருளர் இன மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் தொகுப்பு வீடுகளை உடனடி யாக கட்டிமுடிக்க வேண்டும் என்கிறார். ஆனால் அதிகாரிகள் மெத்தன மாக நடந்துகொள்கின்றனர். இந்நிலை யில், மாவட்ட ஆட்சியரும், அரசும் தொகுப்பு வீடுகள் முழுமையாக கட்டி முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஆர்.தமிழ்அரசு உள்ளிட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.